Friday, June 5, 2009

பாப்ரி மஸ்ஜித் வழக்கு : முக்கிய ஆவணங்கள் மாயம் திடுக்கிட வைக்கும் தகவல்கள்!




பாப்ரி மஸ்ஜித் வழக்கு : முக்கிய ஆவணங்கள் மாயம் திடுக்கிட வைக்கும் தகவல்கள்!


அபூசாலிஹ்

பாப்ரி மஸ்ஜித் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உத்தரப் பிரதேச செயலகத்திலிருந்து மர்மமான முறையில் தொலைந்து போன தகவல் வெளியாகி நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1949ல் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரப் பிரதேசத் தின் அன்றைய முதலமைச்சருக்கு தந்தி மூலம் முக்கிய உத்தரவு ஒன்றை அனுப் பினார். பாப்ரி மஸ்ஜித் வளாகத் தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அப்புறப் படுத்த வேண்டுமென அந்த தந்தியில் கூறப்பட்டிருந்தது. அந்த அதி முக்கியமான தந்தி மாயமாகியுள்ளது.அத்தோடு 1949 ஆம் ஆண்டில் உத் தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளருக்கும் ஃபைசாபாத் மாவட்ட மற்றும் நகர நிர்வாகத்தினருக்கும் இடை யேயான முக்கிய கடித பரிமாற்றங்களும், ஆவணங்களும் மாயமான முறையில் தொலைந்து போன திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடெங்கும் பதட்டத்தீயை பற்ற வைத்துள்ளது. நாட்டின் அதிமுக்கிய ஆவணங்கள் மாயமாய் மறைந்த மர்மம் அம்பலமான விதம் வேதனையும் விநோதமும் நிறைந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் 2002 ஆம் ஆண்டிலிருந்தே கோரி வந்தது. சிறப்பு நீதிமன்றத் தின் கட்டளையை காதில் வாங்காமல் உத்தரப் பிரதேச அரசு கடந்த ஏழு மாதங் களாக கால தாமதப் படுத்தியது. பொறுமையிழந்த சிறப்பு நீதிமன்றம் உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளரே உடனடியாக நீதிமன்றத்தின் நேர் நிற்குமாறு ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர் குறிப்பிட்ட கோப்புகள், ஆவணங்கள் இல்லை என தெரிவித் தார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை பாப்ரி மஸ்ஜித் வழக்குகளை நடத்தி வரும் மூத்த வழக்கறிஞர் ஜஃபர்யாப் ஜீலானியுடன் இணைந்து வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் முஷ்தாக் அஹ்மத் சித்திக்கீ தெரிவித்திருக்கிறார். முக்கியத்து வம் மிகுந்த கோப்புகள் எவ்வாறு மாயமாகிப் போனது? அதன் முக்கியத்து வம் எவ்வாறு தெரியாமல் போனது? நேரு உபி முதல்வருக்கு பிறப்பித்த உத்தரவு, உ.பி தலைமைச் செயலகத்துக் கும், ஃபைசாபாத் நிர்வாகத் துக்கும் இடையிலான கடிதப் போக்கு வரத்துக் கள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்கள் அனைத்தையும் குறித்த விபரங் கள் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக் கப் படவேண்டும் என சிறப்பு நிதிமன்ற உத்தர வுக்கு ஜுலை 6ம் தேதி உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் என்ன பதில் அளிக்கப் போகிறார்? ஆவணங்கள் காணா மல் போனதற்கு நீதிமன்றம் என்ன செய் யப் போகிறது? பாப்ரி மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அநீதி இழைக்கப் படுவதாக குமுறும் மக்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார் கள்? பொறுத்திருந்து பார்ப்போம்

No comments:

Post a Comment